செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்களே !!!

கொலை , கொள்ளை, கற்பழிப்பு , அசிட் வீச்சு , குண்டு வெடிப்பு இப்படி எல்லா தப்பையும் பண்ற ஆம்பளைகளை விட்டுடுடறீங்க.

பெண்கள் காதல்ல எமாத்துறாங்கனு (???) , இப்படிலாம் பாட்டு எழுதறீங்களே..

அடிடா அவல... ஒதடா அவல...
விட்ரா அவல... தேவையே இல்ல..

ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி,
பொம்பளையெல்லாம் தீவரவாதி,
அமைதியா காதல் வேணாம்னு ஒதுங்கற பெண்களை கிண்டல் பண்றத விட்டுட்டு ஆசிட் ஊதறவங்களை கொஞ்சம்  கண்டுக்கங்க !!!!
          ரேப்பையும் பண்ணிட்டு சூப்பு சாங்கும் பாடுறது ஆண்கள் தான்!!!



என் கவிதைகள்


இன்றய விவசாயம்

விளை நிலங்களை
விலை நிலங்களாக்குகிறது.

களை எடுத்தவனை
களை ஆக்குகிறது.

பூச்சிக் கொல்லிகளை
மனித கொல்லிகள் ஆக்குகிறது.

சாப்பாடு போட்டவனை
சாப்ட்வேருக்கு தள்ளுகிறது


விடுதி 
படிப்பது ஒரு குற்றமா ?
ஏன் அடைத்து விடுகின்றனர் , விடுதி என்ற சிறையில் ?

புகை 
பேருந்தில் உள்ளது புகை பிடிக்காதிர் பலகை .
ஆனால் , பேருந்தே நீ புகை பிடிக்கிறாயோ ?
உந்தன் பின்னால் அத்தனை புகை வருகிறதே?

வானம் 
வானமே ,
நீ வானவில் கொண்டையிட்டு ,
சூரிய பொட்டு  வைத்து ,
 நீல வண்ண பட்டுடுத்தி உள்ளாயே !!
அப்படி என்றால் நீயும் ஒரு பெண்ணா ?