செவ்வாய், 15 செப்டம்பர், 2015

என் கவிதைகள்


இன்றய விவசாயம்

விளை நிலங்களை
விலை நிலங்களாக்குகிறது.

களை எடுத்தவனை
களை ஆக்குகிறது.

பூச்சிக் கொல்லிகளை
மனித கொல்லிகள் ஆக்குகிறது.

சாப்பாடு போட்டவனை
சாப்ட்வேருக்கு தள்ளுகிறது


விடுதி 
படிப்பது ஒரு குற்றமா ?
ஏன் அடைத்து விடுகின்றனர் , விடுதி என்ற சிறையில் ?

புகை 
பேருந்தில் உள்ளது புகை பிடிக்காதிர் பலகை .
ஆனால் , பேருந்தே நீ புகை பிடிக்கிறாயோ ?
உந்தன் பின்னால் அத்தனை புகை வருகிறதே?

வானம் 
வானமே ,
நீ வானவில் கொண்டையிட்டு ,
சூரிய பொட்டு  வைத்து ,
 நீல வண்ண பட்டுடுத்தி உள்ளாயே !!
அப்படி என்றால் நீயும் ஒரு பெண்ணா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக