வியாழன், 10 மார்ச், 2016

மனது !!

இந்த மனது ,

ஒரு நாள் நினைக்குது ,
அம்பானி ஆகணும்னு.

அடுத்த நாளே நினைக்குது ,
ஆண்டியா இருந்தா கூட பரவாயில்ல. நிம்மதியா இருந்தா போதும்னு !!


ஒரு நாள் நினைக்குது
'இனிமேல் டயட்ல இருக்கணும்னு ,நோயில்லாம வாழணும்னு '

அடுத்த நாள் நினைக்குது
'சாப்பிடாமா  வாழ்ந்து என்ன சாதிக்க போறோம்னு, நல்ல சாப்பிட்டு வாழ்ந்துட்டு போயிடலாம்னு !!'


ஒரு நாளைக்கு இந்த பாடல் பிடிக்குது ,
'நமசிவாயா நமசிவாயா ஒம் நமசிவாயா '

அடுத்த நாள் பிடிக்குது ,
'டங்கமாரி ஊதாரி ஊத்திகினு நீ நாறி '.!!


என் மனதை என்னாலையே  புரிந்து கொள்ள முடியவில்லை . :(
சும்மாவா சொன்னங்க ?? 'தன்னை அறிந்தவன் ஞானினு'  !!!




மகளிர் தினம் !!!

மகளிர் தினம் கொண்டாடுவதோ அல்லது எங்களுக்கு சரி உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு முன்போ , பெண்களே உங்களுக்கு இரண்டு கேள்வி.
  1. உங்கள் மகனை சமையல் வேலைகளுக்கு அழைப்பது உண்டா ? ( உங்கள் மகளும் அப்பொழுது வேலை இல்லாமல் விளையாடி கொடிருக்கிறாள் என்று வைத்து கொள்ளுங்கள் )
  2. உங்கள் மகன் சமைத்து கொண்டிருக்கும் பொது உங்கள் மருமகள் டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அதை உங்களால் சகித்து கொள்ள முடியுமா? ( உங்கள் மருமகளும் வேலைக்கு போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்)
பெரும்பாலான பெண்களின் உண்மை பதில் 'இல்லை' என்பதுவாகத்தான் இருக்கும்.  ஆகையினால் மாற்றம் என்பது பெண்களிடம் தான் வர வேண்டும்.
உரிமையை கொடு என்று ஆண்களிடம் கேட்பதை விட்டுவிட்டு , உங்கள் மகனுக்கு சின்ன வயதிலிருந்து சமைப்பது, துவப்பைது எல்லாம் பெண்களின் வேலை மட்டும் அல்ல என்பதை புரிய வையுங்கள் .

வேலைக்கு போவதை ஆண்கள் ஏற்று கொள்கின்றனர். அனால் பெண்களின் வேலையை செய்ய மாட்டோம் என்பது மட்டும் சரியா ?

இந்த உண்மையை அணைத்து பெண்களும் புரிந்தும் கொள்ளும் போது அணைத்து நாட்களுமே மகளிர் தினம் தான். அதை தனியாக கொண்டாட தேவை இல்லை.!!